ஜனவரி மாதம் - 2015
2015 ஜனவரி 1 புத்தாண்டு அன்று மாலை 5 மணிக்கு ஆலய வளாகத்தில் சபை குருவை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சபை மக்கள் YMCA யிலிருந்து மேளதாளத்துடனும், சிலம்பம், வாள்வீச்சு போன்றவைகளுடனும் ஊர்வலமாக வந்து சபை குருவை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறினர். சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சியுடன் விழா முடிவுற்றது. முடிவில் சபை குரு ஜெபம் செய்து சபை மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துதலைக் கூறினார்.
டிசம்பர் மாதம் - 2014
நமது ஆரம்ப பள்ளி வளாகத்தில் உள்ள சிறுவர் இல்லத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 14/12/2014 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. சபை மக்கள் அனைவரும் கூடிவந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அக்டோபர் மாதம் - 2014
நமது ஆலயத்திற்கு புதிய குருவானவராக Rev. செல்வின்ராஜ் G. சார்லஸ் M.A., B.D,. அவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். அவர்களை வரவேற்கும் விதமாக 5/10/2014 அன்று ஆலய வளாகத்தில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது. சபை மக்கள் அன்போடு கூடி வந்து புதிய குருவானவரை வரவேற்றனர்.
செப்டம்பர் மாதம் - 2014
நமது சபையில் 5 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் சபை குருவானவர் Rev. ஸ்டீபன் T. டேனியல் M.A.,B.D,.D.D,. அவர்களுக்கு பிரிவு உபசார விழா 28/09/2014 அன்று ஆலய வளாகத்தில் நடைபெற்றது. நமது ஆலயத்தை புதுப்பித்துக் கட்ட காரணமாயிருந்த குருவானவருக்கு சபை மக்கள் அனைவரும் அன்போடு கூடிவந்து பிரியா விடை அளித்தனர்.